24 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3421.500 கிலோ உலர் கஞ்சா செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் எரித்து அழிக்கப்பட்டது.
‘போதையில்லா தமிழ்நாடு’ முயற்சியின் ஒரு பகுதியாக, பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் மனமயக்கப்பொருட்களை அழிக்கும் பணி, போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு, தமிழ்நாடு சிஐடி பிரிவு மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 27.12.2024 அன்று 224 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3421.500 கி.கி. உலர் கஞ்சா, அனைத்து சட்ட முறைகளையும் பின்பற்றி செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட எரிக்கும் ஆலையில் எரிக்கப்பட்டது. போதைப்பொருள்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா தொலைபேசி உதவிஎண் 10581 மூலம் மற்றும் வாட்ஸ்அப் எண் 9498410581 அல்லது மின்னஞ்சல் முகவரி spnibcid@gmail.com மூலம் பகிருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.